Wednesday, May 14, 2014

PART - 1, Chapter - 47

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 47

திருமலையிலே நடந்த அந்தத் திருக்கல்யாணத்துக்கு தேவதைகளெல்லாம் வந்து நின்றிருக்கிறார்கள்.  மகான்கள் குழுமியிருக்கிறார்கள்.  அதியாச்சர்யமாக திருக்கல்யாணம் நடக்கிறது. 
தேவர்களையெல்லாம் கீழே  நம்மையும் அந்த வடவேங்கட மலைமேல் ஏறி வர வைக்கிறான்.  சாமானியர்களான நம்மை எப்படி தேவர்களுக்குச் சமமாய் உயர்த்தி விடுகிறான் பாருங்கள்!  
ஆசார்யர்கள் மூன்று விஷயங்களை மிகவும் உயர்த்திச் சொல்லுவார்கள்:
1. திருவேங்கட யாத்திரை 
2. அக்ரூரர் கோகுலம் செல்கை 
3. வைகுண்டம் செல்லும் மார்க்கம்
அந்த மார்க்கத்தை நினைத்துப் பார்த்தால் இந்த மூன்றும்  சமமான அனுபவங்கள் என்பார்கள்.
"குறை ஒன்றுமில்லாத கோவிந்தா" என்று கோதை அவனைப் பாடினாள். திருமலைக்குப் போகிற அனுபவம் அந்த கோவிந்த நாமத்திலே இருக்கிறதாம்.  எவ்வளவு எளிமையாக்கித் தருகிறான்!  கொஞ்சம் அவன் திருநாமத்தைச் சொன்னாலும் உத்தமமான பலனை அவனது தயையினாலே அள்ளித் தருகிறான்!
சுவாமி தேசிகன் சொல்கிறார்:  "வீணையான என்னை மீட்டி தயாசதகத்தைப் பேச வைத்தான் வேங்கடவன்" என்று.   அதே வேங்கடவன் தான் இப்போது ஸ்ரீனிவாச கல்யாணத்தை நான் விவரிக்கும்படி செய்திருக்கிறான்.  அவன் சொல்ல வைக்க, நான் சொல்கிறேன்.
"சஹஸ்ரநாமத்திலே ஸ்ரீனிவாச கல்யாணம்..? என்று கேட்பீர்கள்.  அந்த பெருமாளே தினமும் சஹஸ்ரநாம அர்ச்சனையைக் கேட்பவன் தானே!
விச்வம் என்கிற ஒரு தர்மத்துக்குப் பத்து அவதாரங்களைப் பொருளாகச் சொன்னேன்.  கோவிந்தா என்று நாமமும் அதே பத்து அவதாரங்களைக் குறிக்கிறது.  கோவிந்தா சப்தத்தை ஆராய்ந்தால் பத்து அவதாரங்களும் இருக்கிறது.  

கோ என்றால் வேதத்திற்குப் பெயர்.  அதை மீட்டுக் கொடுத்த மத்ஸ்யாவதாரத்தைச் சொல்கிறது.
கோ என்றால் பர்வதம் - பர்வதத்தைத் தூக்கிய கூர்மாவதாரத்தை நினைவுப்படுத்துகிறது.
கோ என்றால் பூமி - பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரத்தைக் குறிக்கிறது.
நரசிம்ஹனை கோவிந்தா என்று ஸ்தோத்திரம் செய்தார்கள்.  அதனால் நரசிம்ஹனுக்கும் கோவிந்தன் என்று பெயர்.
பூமியில் மூன்றடி மண் கேட்டான் அல்லவா?  அதனால் வாமனனையும் கோவிந்த சப்தம் குறிக்கும்.  
பூமி முழுவதும் சஞ்சாரம் பண்ணிய பரசுராமனும் கோவிந்தனே.
கோ என்றால் ஆயுதம் என்றொரு பொருள்.  விச்வாமித்ரர் 500 விதமான அஸ்திர சாஸ்திரங்களை ராமனுக்கு அர்ப்பணம் செய்தார்.  அவரிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற ராமனுக்கு கோவிந்தன் என்றும் பெயர்.
பூமியைக் கலப்பையால் இழுத்தவனானதாலே அந்த பலராமனுக்கு கோவிந்தன் என்றொரு பெயர்.
கோ - பசு.   பசுவை ரட்சித்த கிருஷ்ணனுக்கு கோவிந்த நாமம் பொருந்தும்.
இப்படி பத்து அவதாரங்களுக்கும் பொருளாகிவன்  திருமலையிலே இருப்பதாலே - முன்பு பக்கப் பேசப் பட்ட பெருமைகளெல்லாம் - சஹஸ்ரநாம விளக்கமெல்லாம் இந்த ஸ்ரீநிவாசனுக்கும் பொருந்துவதே.

பேராயிரம் கொண்டதோர் பீடுடையவனான திருவேங்கடமுடையான் திருக்கல்யாண உத்வம் - தாரை வார்க்கப்படுகிற நேரத்தில் பத்மாவதி ஸ்ரீனிவாசனைப் பாராமல் வெட்கத்துடன் தலைகுனிந்து இருக்கிறாளாம்.
"இந்தப் பெண் இவ்வளவு வினயமாக இருக்கிறாளே"! என்று வந்தவர்களெல்லாம் வியப்பு அடைகிறார்கள்.  ஒரு பெண்ணுக்கு அழகு வினயம்தானே என்று கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பத்மாவதியின் அனுபவமே அனுபவம்.  அது உலகில் வேறு யாருக்காவது கிடைக்கக்கூடியதா?  அவள் கழுத்திலே ஒரு மாலை அணிந்து கொண்டிருக்கிறாள்.  இரத்தின மாலை.  அதிலே மத்தியிலே ஒரு பெரிய மணி.  அந்த மணியிலே எதிரேயிருக்கிற ஸ்ரீனிவாசனுடைய திருமுக மண்டலம் தெரிகிறது!  அப்புறம் ஏன் தலையைத் தூக்க வேண்டும்! அந்த மணியிலே தெரிகிற பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பத்மாவதிக்கு உலகத்தவரிடத்திலும் நல்ல பெயர்.  அவள் அனுபவத்துக்கும் குறையில்லை!  ஸ்ரீனிவாசனைப் பார்த்து ரசிக்கிறாள்!
ஆந்திர தேசத்திலே நடக்கிற விவாகம் அல்லவா...  அதனால் அந்த தேச வக்கப்படி ஒரு விஷயம். 
ஆந்திர தேசத்திலே மாங்கல்ய தாரத்தோடு "ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே" என்று முகூர்த்தம் முடிந்து விடாது.  சீரகத்தையும் வெல்லத்தையும் சேர்த்து அறைப்பார்கள்.  அதை பெண் - மாப்பிள்ளை கையில் கொடுத்து ஒருவருக்கொருவர் உச்சந்தலையில் வைக்கச் சொல்லுவார்கள்.  இடையிலே  திரைபிடித்திருப்பார்கள். அதுதான் முகூர்த்தம்!  அந்த நேரத்திலே மகா சங்கல்பங்கள் எல்லாம் சொல்லுவார்கள்.
சீரகம் ஒரு ருசி; வெல்லம்  இன்னொரு ருசி.  இரண்டும் கலந்து இழைகின்றன.  அதைப் போலவே இரண்டு பேரும் கலந்து இழைய வேண்டும் என்பது தீகம்.
அதுமட்டுமல்ல.. கல்யாண தினத்திலே உட்காருவதும் எழுந்திருப்பதும் சேவிப்பதுமாக இருப்பதால் சிலருக்கு தலை சுற்றல் போன்ற உபாதைகளெல்லாம் வரும்.  வைத்திய சாஸ்திரப்படி சீரகத்தையும் வெல்லத்தையும் அறைத்து உச்சந்தலையில் வைத்தால் உஷ்ண சமம் ஏற்படுகிறது.
இன்றைக்கும் பெருமாளுக்கு வேங்கடத்திலே, பத்ராசலத்திலே கல்யாண உத்வம் நடத்தும்போதும் இந்த சீரக - வெல்ல சடங்கு நடக்கிறது.
இன்னொரு வழக்கம்.  சோபனாக்ஷதை சேர்ப்பது.  ஒருத்தருக்கொருத்தர் தலையிலே அக்ஷதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  வெள்ளை வெளேரென்று முத்துக்களை எடுத்து பத்மாவதி சிரசிலே சேர்க்கிறான் பெருமாள்.  அது கீழே விழும்போது அப்படியே தங்கக் கட்டியைப் போல் விழுகிறதாம். ஏன்..? பத்மாவதி பொன்னிறத் திருமேனியுடையவளானதாலே முத்துக்கள் அவள் நிறத்தைப் பெற்று அப்படி ஒளிர்கிறதாம்.
ஸ்ரீனிவாசன் சிரஸிலேயிருந்து விழுகிற முத்துக்கள் நீலமணிளாகக் காட்சி அளிக்கிறதாம்.  அவன் நீலமேக ச்யாமண்ணல்லவா..?  அதனாலே.
நாடக அரங்கத்திலே வண்ண விளக்குகளைப் போட்டு மாற்றி மாற்றி சிவப்பு, பச்சை, நீம் என்று காட்சி சித்திரிக்கிறார்களே, அதைப்போல, விளக்குகளுக்கு அவசியமே இல்லாமல் ஒரு வர்ண ஜாலம் நடக்கிறது ங்கே.  நீம், பொன்னிறம், வெண்மை என்று மாறி மாறி விழுகிறபோது, பார்க்கிவர்கள் எல்லாம், "இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா?" என்று ஆசைப்படுகிற அளவுக்கு இருக்கிறதாம் அந்தக் காட்சி.
சரி, இந்த காட்சியைப் பார்க்க முடியாவிட்டாலும் இதை வர்ணிக்கக், கேட்க முடிகிறதல்லவா நமக்கு.. 
அதனால் நமக்குப் பலன் என்ன?
அந்த ஸ்ரீனிவாசனுடைய திருக்கரத்தை நாமும் பிடித்து பத்மாவதிக்குச் சமானமாக அவன் திருவடியிலே கைங்கர்யம் பண்ணும்படியான பாக்கியம் அருள்வான்.
இந்த உலகத்திலே இதனால் நமக்குப் பலன் என்ன?
வாழ்க்கையிலே நடக்க வேண்டிய சமஸ்த மங்கள காரியங்களையும் அது நடத்தி வைக்கும்.
வயதான காலத்திலே, நமக்கு அந்த ஸ்ரீனிவாசனுடனேயே கல்யாணத்தை நடத்தி வைக்கும். அதாவது மோக்ஷ பதவியை அளிக்கும்.
 (முதல் பாகம் நிறைவுற்றது - நல்லோர்களின் ஆசியுடன்)


 




இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு முன் ஸ்ரீ முக்கூர் நரசிம்ஹாமாச்சார்யர் சுவாமியைப் பற்றி சில துளிகள் ...
                                                                                   (Visit: mukurnarasimha.blogspot.in)


EVEN IN this age of very advanced technology, there are certain superhuman instances in the field of spiritualism. How else can one explain this? An extremely obese person had performed the feat of standing waist-deep in the rapidly flowing waters of a river for nearly 60 hours, meditating on God, even without sipping a glass of water, as part of his commitment to carry out a penance. This happened about a year ago in Mattapalli, a village about 150 km from Vijayawada, where the on the banks of the Krishna (in a crevice) the idol of Narasimha is installed. And the incredible act was performed by a well-known Vedic scholar, Sri Mukkur Lakshmi Narasimhachariar, whom God took away to his abode, at the age of 56, just a fortnight ago.

The Pandit had gone round entire India organising 107 Vedic Yagnams over a period of two decades, to highlight the glory of Hindu traditions and to enable men to face problems. Thousands had listened to his discourses on a variety of subjects (the epics, the Puranas, the Upanishads and the Gita) for months, each lecture spreading over even three hours, with Vedic recitations preceding them. His aim was to spread Hinduism and make people understand how they can get over their anxieties by following the teachings in these works.

Inheriting knowledge from his father, who was connected with the Madurantakam Sanskrit College of Ahobila Math, Sri Lakshmi Narasimhachariar had education in Kanchipuram up to PUC and then mastered the Vedas and the Vedanta from his brother who was himself a distinguished preacher of Vedic study. Sri Lakshmi Narasimhachariar also came under the spell of the 44th Jeeyar Swami of Ahobila Math and mastered Sanskrit, Telugu and Tamil, had thorough training in Naalayira Divya Prabhandam and had assimilated all the works of Vedanta Desika and other illustrious leaders. The profundity of his erudition used to astound listeners as he quoted from various sources and works not only of Vaishnavism but also of Adi Sankara, Madhusudana Saraswathi and several other religious heads. The fact that he had been expounding the term ``Vishnu'' in the Sahasranamam for 10 days in a year for three years in succession, at the Asthika Samajam, Alwarpet (Chennai) will reveal how he covered various aspects of religion and philosophy. He also dwelt on steps of atonement for certain acts done violating the scriptural codes.

Sri Lakshmi Narasimhachariar's lecture at the Asthika Samajam were taped, transcribed and published in Kalki. These were later compiled and brought out in book form by Vanathi Pathippagam entitled ``Kurai Ondrum Illai'', the first and second volumes of which have gone to more than one edition and sold all over the world by Tamil people. 
The late scholar had conducted 107 yagams in different parts of India from Rishikesh to Tuticorin. The first was inaugurated in the Asthika Samajam about 20 years ago. His 108th (end the last) is due at Ahobilam. A few persons were prepared to contribute the entire sum required for each yagam but Lakshmi Narasimhachariar was keen that every Asthika should participate in them. He never prescribed any remedy for problems as, in his opinion, that would amount to a commercial proposition and he, a mercenary. In one case, taking permission from the Lord during his prayer he got a girl cured of a serious malady and as a result, she is now well- settled in life. Recently he suggested that a famous Sanskrit hymn, ``Lakshmi Sahasram,'' be recited for 48 days when a miracle did happen as he expected and a couple got back their vision. ``I am a tool in helping these devout devotees.'' Never was he anxious to suggest any miraculous prescription.

It was Sri Mukkur Swami who preached that the ``Leonine form of God'' was not ``fierce'' as some imagined and popularised Narasimha's worship. After a brief period of employment in Vijayawada, at his brother's command he took up the discourse- assignment full-time and made ``Mattappali Narasimha'' a household name. Tragedy struck when his elder brother who was his teacher in the Vedas and Sastras, was killed in a road accident near Vijayawada. Sri Mukkur Swami's daily puja (Aradhana) at his residence in T. Nagar used to take four to five hours and on and off, he went into a TRANCE. Many of his programmes fixed in advance were cancelled as he remarked that ``Narasimha'' had not given him permission.

After conducting a Yagam in Mumbai, he came to Chennai and then proceeded to Kakinada (where he owns a house) where he suffered a massive heart attack and passed away within an hour. His father- in-law, Sri Thirukkallam Narasimha Raghavachariar, was also a reputed scholar who too died when he was 58. The world of religion and Hinduism mourns the loss of a Vedic authority and a spiritual guide in Sri Mukkur Swami's death.

* * * * * * * * *

Sri Mukkur Swami & Setji
Mukkur Sri Lakshmi Narasimhacharya was a renounced exponent on religious discourses was an ardent devotee of Kanchi Periyava. Before commencing his discourse he invariably talks about Periyava and his greatness and then only proceed further on his deliberations.
Once a North Indian Setji used to attend his religious discourse as a routine. The Setji had a disease and he could not eat through the mouth and food was injected in his body through the stomach. All his attempts to cure the disease viz., medication, visit to many temples, doing parikaras etc., were eventually failed. Upon hearing the greatness of Periyava through Mukkur Setji decided to visit Periyava and requested Mukkur to take him to Periyava. Mukkur informed Setji that he will seek the permission first from Periyava himself and then he will take to him.
Mukkur then met Periyava and informed about Setji and his request for meeting Periyava. Periyava, however replied in negative and said “not now”. Later when Setji asked Mukkur regarding his meeting of Periyava, Mukkur tried telling Setji that the meeting will happen later. However he could not withstand the pestering Setji and one day took him straight to the place where Periyava was staying and then informed Periyava that the Setji has come to meet him.
Periyava then told Mukkar to inform him to engage himself in devotional and other religious activities so that he will be cured by the Grace of the God. Mukkur however replied Periyava that Setji is already engaged in all sorts of devotional activities and even gives more in charity.
Periyava then thought for a while and asked Mukkur
“Will he do what I say?”
“I Will ask him to do Periyava”
“Will he print all the eighteen Puranas as separate books in Sanskrit and donate them to all the Vedic Scholars?”
“Definitely Periyava”
Periyava then blessed both Mukkur and Setji and send them off.

Setji upon his return started printing the Puranas in Sanskrit and started distributing to all the Vedic Scholars located in various States.

Even after publishing 17 out of the 18 Puranas there was no sign of recovery for Setji. However Setji’s dedication was awesome and he continued the noble activity despite his ill health.

The grace of Mahaperiyava started pouring when he commenced the activity for the 18th Purana which is Skanda Purana i.e. Purana which details the divine glory of Lord Skanda or Muruga. His health started improving and he started eating through the mouth slowly. Setji and his family very happy on this.

Mukkur and Setji later visited Periyava and thanked periyava.
Mukkur told “Only by the Grace of Periyava Setji got cured.”
However Mahaperiyava humbly denied and told them it is divine power of the Dharma Shastras (Religious Scriputres) of our Country that has cured him and showered his blessings on them!






              -----------------o---------------------

Saturday, May 10, 2014

PART - 1, Chapter - 46

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 46

ங்கநாதரைப் பார்த்து அப்படி என்ன கேட்டார் என்று நினைக்கிறீர்கள்...?
"என்னைப் பார்த்து இதைப் பண்ணினியா,  அதைப் பண்ணினியா? என்று கேட்கிறாயே..  அன்றைய தினம் ததிபாண்டன் வீட்டுப் பானைக்கு எப்படி மோக்ஷம் கொடுத்தாய்?  அந்தப் பானை என்ன கர்மயோகம் பண்ணியதா, ஞான, பக்தி யோகம் பண்ணியதா?  அதற்கு உன்னை வந்திக்க மனமுண்டா, இல்லை வணங்கத்தான் கைகள் உண்டா..?  அந்த கடத்துக்கு மோக்ஷம் கொடுத்தாயே, அந்த விலை நான் பெற மாட்டேனா"? என்று கேட்டார்.
அந்தக் கேள்வி தான் ரங்கநாதனை அப்படி அசத்தியது!
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பக்தர்கள் பகவானை அப்படிப் போட்டு பிணைக்கிறார்கள்!  ஒரு தர்ம சூஷ்மத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  இப்படி ததிபாண்டன் கதை, திரௌபதியைக் காத்த கதை என்று வரிசையாக அவன் சரித்திரத்தை மொத்தமும் அவன் எதிரிலே சொல்ல வேண்டும். 
நம் உலகிலே யாரவது எகிறிக் குதித்தால், "எனக்கு நீ யாருன்னு தெரியாதா?  உங்கப்பா யாரு, உங்க தாத்தா யாரு?  எல்லாம் எனக்குத் தெரியுமாக்கும்!" என நாம் பேசுவதில்லையா?  அப்படிப் பேசினால் எதிராளியும் நமக்கு பணிந்து வருகிறார் இல்லையா...
அதே போல்தான் பகவான் எதிரில் நாம் அவ்வளவு சரித்திரத்தையும் ஒப்பிக்க கற்றுக் கொள்ளனும்.  அவன் லீலா ரசத்தை யார் யார் விரும்பி சிரவணம் பண்ணுகிறார்களோ அவர்களுடைய பயத்தைப் போக்கடித்து விடுகிறான்.

ங்கம், சக்கரம் முதலான பல ஆயுதங்களை ந்தியிருக்கிறான் எம்பெருமான். இவற்றுள் சங்கத்தின் பெருமையைச் சொல்லி முடியாது.  "சொல்லாழி வெண் சங்கே" என்று சங்கத்தை அழைத்துத்தான் ஆண்டாள் பகவான் பெருமைகளைப் பாடினாள். 
சங்கத்தை அதர பல்லவத்தில் பொருத்தி பம் பம்மென்று முங்குகிறான்.  அதிலிருந்து எழும் த்வனி, பீஷ்ம துரோணாச்சார்யர்களுக்குப் பிரவமாகக் கேட்கிறதாம்!
சக்கரமாகிய சுதர்னத்தைப் பிரயோகம் செய்தால் அது என்ன சாதிக்குமோ அதையே இந்தச் சங்கம் ஒலியினாலே சாதிக்கிறது.
சக்கரத்தாழ்வாரும் உயர்ந்தவர்தான்.  விஷ்ணு மார்க்கத்தைக் காட்டக் கூடியதனாலே அவருக்குச் சுதர்னாழ்வார் என்றே பெயர்.
சங்கம், சக்கரம் தவிர கத்தி, கதை என்று பல ஆயுதங்களும் தரித்துக் காட்சி அளிக்கிறான் பகவான்.  நரசிம்ம அவதாரத்தின் போதோ நகத்தையே ஆயுதமாகக் கொண்டு விட்டான்.
சங்கம், சக்கரம், வில், கட்கம் என எதுவானாலும் கையால் பற்றியிருக்க வேண்டும்.  நகம் இருக்கிறதே.. அதை மட்டும் கையிலே பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை.  அவன் உதறினாலும் அது கீழே விழாது.  கூடவே இருக்கும்!
நவீனத்திலே நமக்கு எப்படி வியாமோகம் அதிகமோ அதே போல் பகவானுக்கும் ஈடுபாடு அதிகமாய் இருக்கிறது!  நாராயணன் சக்கரத்தையே நவீனமாய் மாற்றி விட்டான்.  கை நகம் அதைத் தாங்குகிறது.
இந்தப் பெருமை மிகு கோலத்தோடு தோன்றுகிற நரசிம்மன் விஸ்வ சப்தத்தினாலே சொல்லப்படுகிறான்.
திவ்யாலங்காரங்களோடு காட்சி அளிக்கிற பகவான் தேவகி நந்தனன், அவனேதான் சங்கு - சக்ராயுதங்களோடு திருமலையிலே வாசம் செய்கிறான்.
ரங்கநாதரைத் திருவடியிலிருந்து திருமுடிவரை வர்ணிக்கும் திருப்பாணாழ்வார்,
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள் 
சந்திசெய்ய நின்றான்.." என்கிறார்.
மந்திபாய் வட வேங்கடம் - குரங்குகள் பாய்ந்து குதித்துத் திரியும் கிரி பர்வதங்கள்.  அவற்றுள் ஒன்றிற்கு ரிக்ஷபாசலம் என்று பெயர்.  அந்த பெயர் வரக்காரணமே ஒரு பிரத்யேகமான வைபவம்.
ரிஷபாசுரன் என்பவன் ரொம்ப துஷ்டன்.  மூன்று நேத்திரங்களுடைய நரசிம்ம சாக்கிராமத்தை ஆராதிக்கிறான் அவன்.  அவனுடைய நிஷ்டையைச் சொல்லி முடியாது!  அவ்வளவு சிரமப்பட்டு எம்பெருமானை தியானம் பண்ணுகிறான்.
அவனெதிரே பகவான் பிரத்யக்ஷமாகிறான். "உனக்கென்ன வேண்டும்? என்று கேட்கிறான்.
"உன்னோடு சண்டை போடணும்" என்கிறான் அவன்.
"அப்படியா? போடேன்"
குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படுகிற மாதிரி பகவான் கையால் குட்டுப்பட ஆசைப்பட்டான்!
பகவானும் அவன் தட்டுவதை எல்லாம் தாங்கிக் கொண்டு கடைசியில் அவனை அடித்தான்.
பிராணம் போகிற சமயம் - அப்போது அவன் சொல்கிறான்:
"பிராணன் போகிற சமயத்தில் எந்த மூர்த்தியைப் பார்த்தால் மோக்ஷமோ அந்த நரசிம்ஹ மூர்த்தியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்குக் கட்டாயம் மோக்ஷம்தான் வரப் போகிறது.  நான் உன்னிடம் சண்டை போடணும் என்று கோரிய வரம் தவறுதான்.  உணர்கிறேன்.  எனக்கொரு வரம் அருளவேண்டும்.  இந்த இடத்திலே உன்னுடன் போராடி உயர்ந்த கதியை அடைந்ததாலே என் பெயர் இந்த மலைக்கு இருக்கட்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
பகவானும் "ததாஸ்து"! என்று சொல்ல, அந்த மலைக்கு ரிஷபாத்ரி என்று பெயர் வந்தது.
ரிஷபாசுரன் நரசிம்ஹ உபாசனை பண்ணிய இடம் அது.  அது மட்டுமல்ல.. அங்கே நின்று கொண்டிருக்கிறானே திருவேங்கடமுடையான் - அவனும் நரசிம்மோபாசனை பண்ணிய இடம் அது!
இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஒரு விஷயத்தை ரொம்ப சமத்காரமாய்ச் சொல்வார்.
"ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடக்கவிருந்த நேரத்தில் தடை  ஏற்பட்டது. மனைவியோடு போய்  ரங்கநாதனை சேவித்து விட்டு வந்தவன் அவன்.  ஆனாலும் தடை!
ஆனால், குதிரை மேல் ஏறி மலைகளிலும் வனங்களிலும் திரிந்து கொண்டிருந்தானே.. அவன் நரசிம்ஹனை ஆராதித்தான்!  அப்படி ஆராதித்த ஸ்ரீநிவாச பெருமாள் நித்யஸ்ரீயோடு விளங்குகிறான்.  மார்பில் ஸ்ரீயைத் தாங்கி நிற்கிறான்.
அவனுடைய திருக்கல்யாணத்தில் கூட முதல் நிவேதனம் அந்த நரசிம்ஹனுக்குத்தான் நடக்கிறது.  வெங்கடாசல மாகாத்மியத்தில் வரும் அந்தக் கதையைக் கேளுங்கள்.
ஏகமாக பதார்த்தங்கள்.  அக்னி பகவானே வந்து தளிகை பண்ணுகிறான்.
அக்னி பகவான் தளிகை செய்தால் எப்படி இருக்கும்..?!
அன்னத்திலே ஏதாவது லோபம் இருந்தால் அதை உஷ்ணப்படுத்தி லோபத்தைப் போக்கிடலாம்.  அக்னியோட மகிமை அது.  கெட்ட அன்னம் கூட நல்லதாகப் போய்விடுகிறது.
அந்த அக்னியே வந்து சமையல் பண்ணினால் எப்படி இருக்கும்!  தளிகை முடிந்தது.  நிவேதனம் பண்ண வேண்டும் இல்லையா?   "யாருக்கு நிவேதனம் பண்ண வேண்டும்" என்று நான்முகன் மணவறையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீநிவாசனை கேட்கிறார்.  ஸ்ரீனிவாசன் அதற்கு, "அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹனுக்கு யதாவிதியாய் நிவேதனம் பண்ணுங்கள்" என்றார்.
யதாவிதி என்றால் - முறை - கிரமம்.  நரசிம்ஹ ஆராதனம் என்பது ரொம்ப கடினம்.  அதனால்தான் அஹோபிலத்து லக்ஷ்மி நரசிம்ஹனே முதல் சந்நியாசியாக வந்து, உயர்ந்த திருநாராயபுரத்திலே அவதரித்த கேசவாச்சார்யார் என்பவருக்கு திருத்தண்டமும் காஷாயமும் கொடுத்து உபதேசம் செய்வித்தான்.
சந்நியாஸிளால்தான் அவ்வளவு நியமமாக ஆராதனம் பண்ண முடியும் என்று காட்டத்தான் அப்படி நடைபெற்றது.  
அப்படியானால் கிரஸ்தாசிரமத்துக்காரர்களுக்கு அது எவ்வளவு சிரமம் என்று எண்ணிப் பாருங்கள்!
அஹோபிலத்திலே அந்த ஸ்ரீநிவாச பெருமாளே நரசிம்ஹனைக் கைகூப்பி சேவிக்கிற அழகை இன்றைக்கும் பார்க்கலாம்.
கல்யாண காலத்தில் சிறந்த மூர்த்தியாக தியானம் பண்ணக்கூடியவன் அந்த நரசிம்ஹன்.  ஒரு கோயிலில்  ராமன், கண்ணன், நரசிம்ஹன் என்று வெவ்வேறு மூர்த்திகள் இருந்தால் முதல் நிவேதனம் நரசிம்ஹனுக்குத் தான் நடக்கும்.  அப்படியேதான் ஸ்ரீநிவாச கல்யாணத்தின் போதும் நடந்தது.

ஹஸ்ரநாமத்திலே "ஸ்ரீ ஸ்ரீ" என்று 14 முறை வரக்கூடிய ஒரு கட்டம் வருகிறது.  அதைப் பூர்த்தியாக விவரித்தாலே வெங்கடாசல மகாத்மியம் விவரித்த மாதிரி ஸ்ரீநிவாச கல்யாணம் வரை முழுவதையும் அந்த சப்தத்தினாலே சம்பாதிக்க முடியும்!
எப்படி நடக்கிறது அவன் கல்யாணம்..?
இந்த ஸ்ரீநிவாச அவதாரத்திலே, பரமாத்மா அவனையே நினைத்து ங்கக்கூடிய பத்மாவதியின் கிரத்துக்குப் போகிறான்.  ஆகாச ராஜனின் புதல்வி பத்மாவதி.
அந்த ஆகாச ராஜன் கிரஹத்துக்கு பகவான் எந்த வே-ஷத்தில் போனான் தெரியுமோ..?
குறத்தி வே-த்தில் போகிறான்!  வே-ஷம் போடுவதிலே வல்லவன் அவன்!  குறத்தியாய் வே-ஷம் போட்ட பரமாத்மா வந்த அழகே அழகு!  வெறுமனே பார்க்கும் போதே அவன் சுந்தரன் தான்.. இப்படி வே-ஷத்தைப் போட்டுக் கொண்டு வந்தால் உலகமே மயங்கி நிற்கிறது!
ஆகாச ராஜனும் அவன் தர்ம பத்னியும் பார்த்து விட்டு உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
"நீ எந்த ஊர் குறத்தி"? என்று கேட்கிறாள் பத்மாவதி.
முத்துமலை, குடகு மலை என்று ஒரு மலை விடாமல் விவரிக்கிறான் பகவான்.  
"யார் யாருக்கு குறி சொல்லியிருக்கிறாய்"?
"நான் சாமான்ய குறத்தி  அல்ல.  இந்திரனுக்கும் இந்திராணிக்கும் இசைந்த குறி சொன்னேன்".  "இந்திரனும் இந்திராணியும் மெச்சிக் கொண்டார்கள் என்னை"
என்று பாடிக் காட்டி திருமூர்த்திக்கே குறி சொன்ன கதையை விவரிக்கிறான்.
"உங்கள் நாட்டிலே க்ஷேம லாபங்கள் எப்படி" என்கிறாள் பத்மாவதி.
நாட்டிலே நிலவும் சுபிட்சத்த்தை சொல்கிறாள் குறத்தி.
"யாருக்கும் பகைமை என்பதே கிடையாது.  புலியும் பசுவும் ஒரே நீரோடையில் நீர் குடிக்கும்.  வாழை மரம் கிழக்குப் பக்கமாக குலை தள்ளும்.  பலா மேற்கு பக்கமாக உற்பவிக்கும்" - இதெல்லாம் லோகத்தின் க்ஷேமத்தைக் காட்டக் கூடிய அறிகுறிகள்"
இதையெல்லாம் கேட்ட பிறகு, பத்மாவதியை குறத்தியின் பக்கத்தில் உட்கார வைத்துக் கையைப் பார்க்க சொல்கிறார்கள்.
சொன்னால்... அப்போதைக்கப்போதே கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் பகவான் அந்தக் கையை!
பத்மாவதி தன் மனதுக்கு உகந்தவனைக் கைப்பிடிப்பாள் என்று சூசகமாகச் சொல்கிறான்.
அவன் அவ்வாறு பத்மாவதிக்குச் சொன்ன குறி சப்தத்தைக் கேட்கிற அத்தனை பேர் கிரத்திலும் கல்யாணத்துக்குத் தடையிருந்தால் நீங்கிப் போகுமாம்.

இவ்வளவு நாட்களாக எத்தனையோ  வேத,வேதாந்த, சத் விஷயங்களைப் பற்றிப் பேசினோம்.  ஆனால், அத்தனையைக் காட்டிலும் பகவானுடைய குத்துக்கு இருக்கிற பலனைப் பாருங்கள்!

எளிமையை மதிக்கவும் வந்திக்கவும் கற்றுத் தருகிறான் அவன்.

(தொடரும்)


 





 






 



 


Friday, May 9, 2014

PART - 1, Chapter - 45

குறையொன்றுமில்லை (முதல் பாகம்) 
அத்தியாயம் - 45

மணி சொன்ன மணியான வார்த்தை இதுதான் - நாம் எப்போதும் ஹ்ருதயத்திலே வைத்துக் கொள்ள வேண்டிய வார்த்தை:
"ஹே பிரபு! ஜகன்னதா!  சர்வலோக சரண்யா!  தங்களுக்கு நிவேதனம் ஆகிக் கொண்டிருக்கும் பொது நான் பக்கத்தில் இருந்து அடிக்காமல் போனால் எனக்கு ஏது பிரயோஜனம்?"
பகவான் வெண்ணையை வாயில் போட்டுக் கொண்டதைத்தான் நிவேதனம் என்றது அந்த மணி!
"நான் ஸ்வரூப லாபம் பெற வேண்டாமா?  நீங்கள் உண்ணும் நேரம் தேவதைகள் வரவேண்டும்;  ராக்ஷஸர்கள் ஓட வேண்டும்.  அந்த பிரணவம் த்வனிக்க வேண்டும்.  அதனால் தான் அடித்தேன்".  மணி அடிப்பது கூட பெரியோரிடத்திலே பழகி அடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிகிறது.  ஒவ்வொருவிதமாக அடிப்பதற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
தூரத்தில் இருப்பவர்கள் கூட, மணி அடிக்கும் விதத்தைக் கொண்டே பகவானுக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
மணி சொன்ன பதிலுக்கு மறு பேச்சு இல்லை பரமாத்மாவிடம்!   குடுகுடுவென்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.  ஊர்க் கடைசியிலே ஒரு வீடு.  அந்த வீட்டுக்குள் போய்ப் புகுந்தான்.
எதிர்பாராத சமயத்திலே வந்து நிற்பதுதான் பகவானுடைய குணவிசே-ஷம்!  வருவான் என்று நினைக்கும் நேரத்தில் வரமாட்டான்;  வர மாட்டான் என இருக்கும்போது வந்து சேருவான்.
அப்படி எதிர்பாராமல் பகவான் நுழைந்த வீடு ததிபாண்டன் என்கிறவனுடைய வீடு.  அந்த வீட்டுக்குள்ளே நுழைந்து ஒவ்வொரு பானையாக திறந்து பார்க்கிறது குழந்தை.  எல்லாப் பானைகளிலும் தயிர் நிரம்பிக் காணப்படுகிறது.  கோபிகாஸ்த்ரீகள் குழந்தையைத் துரத்திக் கொண்டு வருகிறார்கள்.  கடைசியிலே பார்த்தால், ஒரு பானை காலியாக இருக்கிறது!
இந்தக் குழந்தை, அந்த காலி பானைமேலே ஏறி, உள்ளே தொப்பென்று குதித்து உட்கார்ந்து கொண்டது.
இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ததிபாண்டன்...
"ஓஹோ!  இன்னைக்கு இந்தக் கண்ணனை விடக் கூடாது" என்று மனத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டான்.  பானை மேலே மூடி போட்ட மாதிரி ஏறி உட்கார்ந்து விட்டான்!
யசோதையும் கோபிகாஸ்த்ரீகளும் அருகே வந்தார்கள்.  யசோதை கேட்டாள்: 
"ததிபாண்டா!  என் குழந்தை கிருஷ்ணன் இங்கே வந்தானா..?
அப்பட்டமான பொய்யை அழகாக சொல்கிறான் ததிபாண்டன்.  
"உன் குழந்தை கிருஷ்ணனா?  இந்தப் பக்கமே வரவில்லையே..!  அவனை நான் பார்த்தே 6 மாதமாகிறதே!"
பொய் சொன்ன ததிபாண்டனுக்கு மோக்ஷம் கிடைத்தது!  உண்மையைப் பேசிய தசரதனுக்கு நரகப்பிராயமான சுவர்க்கம்தான் கிடைத்தது!
தசரதைனைக் காட்டிலும் ததிபாண்டன் உயர்ந்தவன் என்பதைக் காட்டுகிறார்கள் வியாக்யானக்காரர்கள்:
"விகர்மா" என்றால் பொய் சொல்வது.  ஆனால் சில நேரத்திலே, பொய் சொல்வதே கர்மாவாக ஆகிவிடுகிறது!  இந்திந்த இடத்திலே பொய் சொல்லலாம் என்று சாஸ்திரமே விதித்திருக்கிறது.
உதாரணமாய், விவாக காலத்திலேயே பொய் சொல்லலாம் என்று இருக்கிறது.  விவாக காலம் என்றால் நிச்சயத்தார்த்தத்திலேயிருந்தே பொய் சொல்லலாம் என்று அனுமதி கிடையாது!  அந்தக் கல்யாணம் நடக்கவிருக்கிற கட்டத்திலே அது நின்று போய்  விடுமோ என்கிற அபாயம் இருந்தால் சொல்லலாம்.
ஒருத்தன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு பசுவை வெட்டித்தள்ள ஓடுகிறான்.  அந்தப் பசு அம்மா என்றபடி ஆசிரமத்திலே நுழைந்து விட்டது.  அங்கேயிருந்த முனிவரைப் பார்த்து, கத்தி ஏந்தியவன் கேட்கிறான்: 
"பசு வந்ததா இந்தப் பக்கம்?"
"கண் பார்க்கும்,  ஆனால் பேசாது;  வாய் பேசும்,  ஆனால் பார்க்காது" என்று பதில் சொல்கிறார்.
கொலை செய்ய வந்தவன், ஏதோ  உளறுகிறது என்று புறப்பட்டுப் போய்விட்டான்.
இப்படி சாமர்த்தியமாய் பேசுவது ஒருவகை என்றால், ததிபாண்டனோ  பொய்யே பேசினான்.  அவனுக்கு எப்படி மோக்ஷம் கிடைத்தது..?

சாமான்ய தர்மம், விசே-ஷ தர்மம் என்று இரண்டு வகை சொல்வார்கள்.  விசே-ஷ தர்மம் பண்ண வேண்டிய காலம் பக்கத்திலே வந்து விட்டால் சாமான்ய தர்மத்தை விட்டுவிட்டு அந்த விசே-ஷ தர்மத்தைத்தான் நாம் கடைப் பிடிக்க வேண்டும்.
வீதி புறப்பாடு நடக்கிறது.  பகவான் 4 மணிக்குப் புறப்படுகிறான்.  வேத கோஷ்டி, எழுந்தருளப் பண்ணக்கூடியவர்கள், பரிசாரகர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் அவனை எழுந்தருளப் பண்ணி வந்து கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்குப் போய்ச் சேர எட்டரை மணி ஆகும்.  ஒரு வீதியிலே பகவான் வந்து கொண்டிருக்கும்போது ஆறேகால் மணி ஆயிற்று..
என்ன சமயம் அது?  சந்தியாவந்தனத்துக்கான சமயமல்லவா?  உடனே, சுவாமியை, "இங்கேயே நின்னுகொண்டிரு.. நாங்கள்  வந்து திரும்பவும் எழுந்தருளப் பண்ணுகிறோம்" என்று சொல்லலாமா?  நடுத்தெருவிலே அவனை நிறுத்தி வைத்து விட்டு வரலாமா?
இதற்கு ஒரு வழியிருக்கிறது.  பகவானைக் கொண்டு போய் கோவிலில் எழுந்தருளப் பண்ணியபிறகு, காலாதீத பிராயச்சித்தார்த்தமாக, இன்னொரு அர்க்கியத்தைக் கூடுதலாக விட்டு சந்தியாவந்தனத்தை முடிக்கலாம்.
இப்படியொரு விதிவிலக்கு இருக்கிறதனாலே நித்யம் இதையே பண்ணக்கூடாது!  என்றைக்கு முடியாமல் போகிறதோ அன்றைக்கு மட்டும் பண்ணலாம்.
பகவானை எழுந்தருளப் பண்ணுகிற விசே-ஷ தர்மத்திலே நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, சந்தியாவந்தனம் என்பது சாமானிய தர்மமாகப் போய்விடுகிறது.

ந்த மாதிரிதான் விசே-ஷ தர்மத்தை பானைக்குள் இருக்கும் பகவானைக் காத்தலாகிய தர்மத்தைக் காப்பதற்காக, ததிபாண்டன் உண்மை பேசுதல் என்கிற சாமானிய தர்மத்தை கை விட்டான்.  "கிருஷ்ணனைப் பார்க்கவேயில்லையே" என்றான்.  அவனுக்கு மோக்ஷம் கிடைத்தது.
தசரதன் இருக்கிறானே.. அவன் என்ன செய்தான்..?  விசே-ஷ  தர்மமாகிய ராமனைக் காட்டுக்கு அனுப்பி, "கைகேயிக்குக் கொடுத்த வாக்கு" என்கிற சாமான்ய தர்மத்தைக் காத்தான். அவனுக்கு வெறும் சொர்க்கம்தான் கிடைத்தது.  ததிபாண்டனுக்கோ  மோக்ஷமே கிடைத்தது!

திபாண்டன் சொன்ன பொய்யைக் கேட்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். என்ன ஆச்சரியம் பாருங்கள்!  அவர்கள் போன பிற்பாடு, பானைக்குள் இருக்கும் குழந்தை ததிபாண்டனை ஒரு குத்து குத்துகிறது.  "எத்தனை நாழி இப்படி உட்கார்ந்திருப்பாய்? எனக்கு மூச்சு வாங்குகிறது" என்கிறது குழந்தை. 
அதற்கு அவன் சொல்கிறான்:  "ஹே  கிருஷ்ணா!  உனக்கு இந்தப் பானையிலேயிருந்து மோக்ஷம் வேண்டுமானால் எனக்கு நீ மோக்ஷம் தர வேண்டும்".
"உனக்கு மோக்ஷமா"?
"ஆமாம்.  இந்தப் பிறவியாகிற பானையில் இருந்து எனக்கு மோக்ஷம் வேண்டும்"
இதைக் கேட்டு குழந்தை  சொல்கிறது:
"உனக்கு மட்டும் என்னடா மோக்ஷம்?  அந்தப் பானைக்கும் சேர்த்துக் கொடுப்பேனாக்கும் மோக்ஷம்!"
"பானைக்கும் சேர்த்துக் கொடுப்பாயா.."?
"ஆமாம்" என்று எழுந்தான் பகவான்.  
சொன்னவுடனே, சொன்ன வண்ணம் செய்யும் பெருமான் அவன்.  புஷ்பக விமானம் வருகிறது.  ததிபாண்டனோடு கூட அந்தப் பானையும் ஏறிக்கொண்டது விமானத்திலே!   வைகுண்டத்துக்குப் போனது.  
இப்போதும் நாம் வைகுண்டத்த்துக்குப் போனால் அந்தப் பானையைப் பார்க்கலாம்!

ஸ்ரீரங்கத்திலே பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்கு இந்தப் பானை மோக்ஷமடைந்த சரித்திரம் நடையாடுகிறது.
அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு, "ரங்கநாதா!  எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்!
அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான்.   "பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."?
"இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர்.
"அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாது"
"ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"?
"அறவே ஞான சூன்யம் நான்"
"பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"?
"அந்தப் பக்கமே போனதில்லை"
"சரணாகதி பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாதே"
"இதெல்லாம் எப்படியாவது போகட்டும்.  என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"? 
"இல்லையே"
"என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"?
 "இல்லை"
"எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம்.  படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார்.
அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும்தான்.  நாமெல்லாம் சயனத் திருக்கோலம்தானே பார்த்திருக்கிறோம்!
"என்ன அக்கிரமம்!  மோக்ஷத்தை நீர் இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே!  மோக்ஷம் என்றால் ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்தீரோ?  எதையாவது கேட்டால் "இல்லையே, தெரியாது"  என்கிறீர். எதற்காவது "ஆமாம், பண்ணியுள்ளேன்" என்று பதில் சொன்னால்தானே மோக்ஷம்  தரலாம். ஒன்றுமே பண்ணாத உமக்கு மோக்ஷத்தை எப்படிக் கொடுப்பது?"
இதைக் கேட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்குக் கோபம் வந்து விட்டது!  இடுப்பில் வஸ்திரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார்.  ரங்கநாதரிடம் அச்சமயம் அவர் கேட்ட கேள்வி இருக்கிறதே..?
அந்தக் கேள்வியைக் கேட்டு மீண்டும் படுத்த ரங்கநாதன் படுத்தவன்தான்!  இன்று வரைக்கும் அவன் எழுந்திருக்கவேயில்லை!
அப்படியென்ன கேட்டாரம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..?  
ஒரு அத்தியாயம் பொறுங்கள், சொல்கிறேன்.

(தொடரும்)